Home இலங்கைகிண்ணியாவில் இன்று மேலும் இருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு

கிண்ணியாவில் இன்று மேலும் இருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு

by admin


திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உள்பட மேலும் இருவர் இன்று ஞாயிறுக்கிழமை  உயிரிழந்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனைத் தொடர்ந்து  டெங்கு காய்ச்சல் காரணமாக கிண்ணியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டாக  அதிகரித்துள்ளது. திருகோணமலை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமியும் 40 வயதான பெண்ணொருவருமே இன்று உயிரிழந்துள்ளனர்.

இரு வார காலப்பகுதிக்குள் கிண்ணியாவில் 3 மாணவர்கள் ,3 பெண்கள் உள்பட 8 பேர் உயரிழந்துள்ளதுடன் 1200 பேர் வரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் நோய் பரவுவதனை தடுப்பதற்காக மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சகங்கள் பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More