Home இலங்கை பதற்றத்தின் மத்தியில் தொடரும் கேப்பாபுலவு உணவுத் தவிர்ப்புப் போராட்டம் :

பதற்றத்தின் மத்தியில் தொடரும் கேப்பாபுலவு உணவுத் தவிர்ப்புப் போராட்டம் :

by admin

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிரதேசத்தில் விடுவிக்கப்படாத 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் 12 நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை மூன்றாவது நாளாக உணவுத் தவிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் உணவுப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயக்கமடைந்து விழுந்ததையடுத்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது. தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

128 குடும்பங்களிற்கு சொந்தமான 482 ஏக்கருக்கு அதிகமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமம், சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு, இசூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு கேப்பாப்புலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள், வீடுகள், பாடசாலை, வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள், வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More