Home இலங்கை கரைச்சி பிரதேச விளையாட்டு விழா-2017 கனகபுரம் சாம்பியன்

கரைச்சி பிரதேச விளையாட்டு விழா-2017 கனகபுரம் சாம்பியன்

by admin

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக விளையாட்டு விழா 2017 இல் கனகபுரம் விளையாட்டுக்கழகம் முதலாவது இடத்தினை பெற்று சாம்பியனானது. வருடந்தோறும் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் இடம்பெறுகின்ற  விளையாட்டு விழா இம் முறை கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்குகொண்டிருந்தனர். குறிப்பாக ஜெயந்திநகர் மகாதேவா சைவ சிறார்(குருகுலம்) இல்ல மாணவர்களும்  மகாதேவா விளையாட்டுக்கழகம் மூலம் விளையாட்டுப்போட்டிகளில் பங்குகொண்டு பல போட்டிகளில் வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக இடம்பெற்ற 2017 கரைச்சி பிரசேத விளையாட்டு விழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சி. சத்தியசீலன் அவர்கள் கருத்து தெரிவித்த போது

கிளிநொச்சி மாவட்டம் விளையாட்டுத்துறையில் மேலும் வளரவேண்டும்.  கடந்த ஆண்டு இடம்பெற்ற வடக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது. ஆனால்  இவ்வருட போட்டியில் அதை தாண்டி வரவேண்டும் எனத் தெரிவித்த அவர் கிளிநொச்சியிலிருந்து தேசிய  சாதனைகளை நிலைநாட்டவும் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கும் கொள்ளும் அளவில் போட்டியாளர்கள்  வளர்ந்துள்ளனர். ஆனாலும் விளையாட்டில் மேலும் வளரவேண்டும் நாம் அதற்காக எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.

இ;ந்த நிகழ்வில்  வட மாகாண விளையாட்த்துறை பிரதிப் பணிப்பாளர் குருபரன், மாவட்டசெயலக பிரதி திட்டப்பணிப்பாளர் கௌரிதாசன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி  விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More