Home இலங்கை அரசியல் தீர்வைப் பெற வேண்டுமானால் சிறுபான்மைக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

அரசியல் தீர்வைப் பெற வேண்டுமானால் சிறுபான்மைக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

by admin

இந்த நாட்டில் அரசியல்  தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள   வேண்டுமானால்  சிறுபான்மையினக்  கட்சிகள்  இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது  காலத்தின்  கட்டாயமாக அமைந்துள்ளதாக கிழக்கு  மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையின  கட்சிகளுக்கிடையில்  அரசியல் தீர்வு தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுமானால்  இறுதியில்  அது  அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமாகவே  அமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.    தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல்  தீர்வுத் திட்டத்தின் சாத்தியத்தன்மை குறித்து  கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தீர்வொன்று  சாத்தியமாகும் காலகட்டத்தில் இந்த முரண்பாடுகள் காரணமாக முன்வைக்கப்பட்ட தீர்வுகள் காலந்  தாழ்த்தப்படுவதற்கு  காரணமாக  அமையும்  எனவும்  அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மைத்தரப்புக்கள் ஒரு  மேசையில்  அமர்ந்து   தமது சமூகங்களுக்குரிய தீர்வுகளை அடையாளப்படுத்தி அதில்  இருக்கும் சந்தேகங்களையும் முரண்பாடுகளையும்  தீர்த்துக்கொள்ள   முன்வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More