Home இலங்கை புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது உதவியதாக ஒப்புக்கொண்ட இந்திய கடற்படை

புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது உதவியதாக ஒப்புக்கொண்ட இந்திய கடற்படை

by admin

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது உதவியதாக இந்திய கடற்படையினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த இந்திய கடற்படையின் பிரதம அதிகாரி சுனில் லாண்பா (Sunil Lanba) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கப் படையினருக்கு உதவியதாக மறைமுகமாக கூறியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இந்திய கடற்படைக்குச் சொந்தமான ரீ.யூ. 142எம் ரக ரோந்து விமானம்,  இலங்கை வான்பரப்பில் உலவியதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும் இது குறித்து கேள்வி எழுப்பிய போது புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது உதவிய அர்த்தத்தில் தாம் கூறவில்லை எனவும், இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் கடமையாற்றியதை கூறியதாகவும் இந்திய கடற்படையின் பிரதம அதிகாரி சுனில் லாண்பா  தெரிவித்துள்ளார்.
அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More