Home இலங்கை களுத்துறை சிறைச்சாலை பேரூந்து தாக்குதலுக்கு உதவிய இருவர் கைது

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து தாக்குதலுக்கு உதவிய இருவர் கைது

by admin


களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தை மறைத்து வைப்பதற்கு உதவியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை மற்றும் பண்டாரகம பிரதேசத்தில் வைத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் மொரட்டுவை மற்றும் பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 48 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்துக்கு போலி இலக்கத்தகடு பொருத்தி தாக்குதலுக்காக வாகனத்தை வழங்கியதாகவும் தாக்குதல் முடிந்த பின்னர் உண்மையான இலக்கத்தகட்டை பொருத்தி வாகனத்தை  குறித்த பிரதேசம் ஒன்றில் விட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில்  தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட உடைகள் எரிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் 2011ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More