ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் மாற்றம் செய்யப்படாது என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் பதவிகளில் மாற்றம் செய்யப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவி மாற்றம் செய்யப்பட உள்ளதாக சில ஊடகங்களில் போலிச் செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான செய்திகளில் உண்மையில்லை எனவும், கட்சியை பிளவுபடுத்த இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொய்ப் பிரச்சாரங்களின் மூலம் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment