Home இலங்கை இறக்­காமம் முஸ்லிம் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையின் பின்னணியில் தயா கமகே – இபாஸ் நபுஹான்

இறக்­காமம் முஸ்லிம் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையின் பின்னணியில் தயா கமகே – இபாஸ் நபுஹான்

by admin

அம்­பாறை, இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு, மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள முஸ்லிம் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையின் பின்னணியில் அமைச்சர் தயா கமகே இருப்பதாகவும் அதனாலேயே இந்த தேரர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்யவில்லை எனவும்  பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான்  குற்றம் சுமத்தியுள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்  மேற்­படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில்  இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஆக்­கி­ர­மிக்கும் முயற்­சியை கடந்த  வியா­ழக்­கி­ழமை பௌத்த பிக்­குகள் மேற்­கொண்­டுள்­ள நிலையில் தனியார் காணிகளில் அத்துமீறி நுழைந்தவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை  பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை  என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை நிறு­வி­யி­ருந்த நிலையில் நேற்­றைய தினம் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணியில் விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்­கு­களும் மேலும் சிலரும் முயற்­சி­களை மேற்­கொண்­டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சம்­பவம் கார­ண­மாக இப்­பி­ர­தே­சத்தில் பதற்ற நிலை ஏற்­பட்­டத­னை­ய­டுத்து பொலிஸார் தலை­யீடு செய்து விகாரை அமைக்கும் பணி­களை தடுத்து நிறுத்­தியுள்ளனர்.

எனினும் அவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.அமைச்சர் தயாகமகே இந்த பின்னணியில் இருப்பதால் தேரர்களுக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளர்h.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More