Home இலங்கை கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாளர்களும் உறவினர்களும் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாளர்களும் உறவினர்களும் ஆர்ப்பாட்டம்

by admin

கிளிநொச்சியில் இன்று(24)  சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாள்ரகளும் அவர்களது உறவினர்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பெருமளவானவர்கள் கலந்துகொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில்  தாங்கள் பணியாற்றுகின்ற சிவில் பாதுகாப்புத் திணைக்கள பண்ணைக் காணிகளை பறிக்க வேண்டாம் என கோரிக்கையை முன்வைத்தே இந்தப் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.  காலை பத்து மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட  பேரணி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் தங்களின்  கோரிக்கை கடித்தையும் கையளித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட காணிகளை பறி;க்காதே, பறிக்காதே பறிக்காதே விவசாய நிலங்களை பறிக்காதே,அகற்றாதே அகற்றாதே சிவில் பாதுக்காப்புத் திணைக்களத்தை வட மாகாணத்தை விட்டு அகற்றாதே போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

மேலும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்னாள் பேராளிகள்,பெண்தலைமைத்துவ குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்குள் வாழும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் 35 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு பணியாற்றி வருகின்றார்கள்  எனவே அவர்களது வாழ்வாதாரத்தையும் கருத்தில் எடுக்கவேண்டும் இங்கு பணியாற்றுகின்ற அனைவரும் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் யுத்தப் பாதிப்புக்களை முழுமயாக எதிர்கொண்டவர்கள் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More