Home இலங்கை ஊர்காவற்துறையில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் மயக்க மருந்து விசிறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி –

ஊர்காவற்துறையில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் மயக்க மருந்து விசிறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி –

by admin


ஊர்காவற்துறை பகுதியில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் ,  வீட்டில் தனித்திருந்த பெண்ணை மயக்க மருந்து விசிறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வேளை ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, நையப்புடைக்கப்பட்ட பின்னர் காவல்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த சந்தேக நபர்  மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியை சேர்ந்த 35 வயதான நபர் எனவும், தற்போது ஊர்காவற்துறை பகுதியில் தங்கி இருந்து கட்டட நிர்மான பணியில் ஈடுபட்டு வருபவர் எனவும் , குறித்த நபர் காவல்துறை சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் எனவும் ,  ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த சந்தேக நபர் அங்கு தனித்திருந்த 18 வயதுடைய யுவதி தூக்கத்தில் இருந்த வேளை அவரது வாயை கைகளினால் பொத்தியவாறு அவர் மீது மயக்க மருந்தை விசிறியுள்ளார்.

அவ்வேளை சுதாகரித்த யுவதி சந்தேக நபரின் பிடியில் இருந்து திமிறி கூக்குரல் எழுப்பியுள்ளார். யுவதியின் கூக்குரலை கேட்ட அயலவர்கள் திரண்டு சந்தேக நபரை மடக்கி பிடித்துள்ளனர். அதன் பின்னர் சந்தேக நபரை அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து முறையான கவனிப்பின் பின்னர் , ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் சந்தேக நபரை கையளித்தனர்.

அதனை அடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை சந்தேக நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கமாறு நீதிவான் உத்தரவு இட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More