பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் இந்த மாத இறுதியுடன் பூர்த்தியாகவுள்ள நிலையில் விசாரணைகள் பூர்த்தியாகாத காரணத்தினால் விசாரணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment