Home இலங்கை ரணிலின் இந்திய பயணத்தின் போது எண்ணெய் தாங்கி குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படலாம்

ரணிலின் இந்திய பயணத்தின் போது எண்ணெய் தாங்கி குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படலாம்

by admin


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின் போது எண்ணெய் தாங்கி குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படலாம் என ஜே.என்.பி கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த பயணத்தின்போது இரகசியமான முறையில் திருகோணமலை சீனன்குடாவில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவது குறித்து புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படலாம் என ஜே.என்.பி கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசாம்மில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு எண்ணெய்த் தாங்கிகள் வழங்கப்படாது என அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதி ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் இந்திய பயணத்தின் போது அல்லது இந்திய பிதமரின் இலங்கைர் பயணத்தின் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படலாம் என அவா குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More