84
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான சகல உறவுகளையும் வலுப்படுத்திக் கொள்ள நடவடி;ககை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சரத் குமாரவிற்கும், ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் ஹூசெய்ன் டெக்கானுக்கும் இடையில் மொஸ்கோவில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச பாதுகாப்பு குறித்த மாநாடு ரஸ்யாவில் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love