Home இலங்கை இறக்காமம் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு – சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

இறக்காமம் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு – சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

by admin


அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் அமைச்சர்   ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது

இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம் சந்திப்பில்  மாணிக்கமடு மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் பல்வேறு சாதகமான  தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வெளியிடப்பட்டுள்ள ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையை  அண்டிய பகுதியில்  சிறுபான்மையினரின் காணிகளே உள்ளன எனவும்  அவர்களின் காணி உறுதிகள்  உட்பட ஆவணங்கள்  ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்   அது தொடர்பிலும் ஜனாதிபதி விசேட  கவனம் செலுத்தியுள்ளதுடன் அத்துடன் கிழக்கில்  காணப்படும் சிறுபான்மையினரின்  காணி ஆக்கிரமிப்புக்கள்,அத்துமீறல்கள் தொடர்பிலும் ரவூப் ஹக்கீம் இதன் போது  ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்இரா,சம்பந்தன் மற்றும்;  ரவூப் ஹக்கீம் ஆகியோர்  மாணிக்க மடு  தொடர்பில்  ஜனாதிபதியிடம் பல அழுத்தமான கோரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் எனவே  இது  தொடர்பில் ஜனாதிபதியினால் சாதகமான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுக்கூடிய  சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  மாணிக்கமடு  விவகாரம்  தொடர்பில் கிழக்கின் ஆளுனர் மற்றும் அம்பாறை மாவட்ட  அரசாங்க அதிபரிடமும் ஜனாதிபதி  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் இதன் போது  அவர்களுக்கு ஜனாதிபதி பல சாதகமாக பணிப்புரைகளை விடுத்துள்ளதாகவும் குறித்த ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More