Home இலங்கை முன்னாள் போராளிகள் குறித்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகள் குறித்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

by admin

முன்னாள் போராளிகளுடைய புனர்வாழ்வு, வாழ்வாதாரம் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை, வேலைவாய்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில்   கலந்து கொண்டு  அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  மேற்குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளை  சரியான நேரத்தில், சரியான முறைப்படி   அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்படும் எனத் தெரிவித்த அவர்  காணிகள்  தொடர்பான முழுமையான தகவல்களுடன் எதிர்க்கட்சித் தலைவரை , ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருடனும் பேச்சுவார்த்தை நடாத்துமாறு கோரப்பட்டதாகவும்  உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்  காணி விடுவிப்பு, பட்டதாரிகளின் பிரச்சினை, இடம்பெயர்ந்தோர் பிரச்சினை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்பன குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாகவும்  எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More