Home இலங்கை இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் காலமானார்

இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் காலமானார்

by admin

இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் இன்று தனது 81வது வயதில் காலமானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றி வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றுள்ளார். ஆரம்பத்தில்  ஆசிரியராக பணியாற்றிய அவர்  1965இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்  பகுதி நேர அறிவிப்பாளராக தனது அறிவிப்புத்துறையை ஆரம்பித்தார். 1969இல் நிரந்த அறிவிப்பாளரான அவர், தொடர்ந்து பல பதவிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வகித்திருக்கின்றார்.

இலங்கையில் செய்தி வாசிப்பு துறையிலும், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பிலும் சிறந்து விளங்கிய பெண்களில் இவர் மிகவும் பிரபலமானவராக கணிக்கப்படுகின்றார்.  ஒலிபரப்புத்துறைக்கு அப்பால் கொழும்பு தமிழ் சங்கத்தின் துணைத்தலைவராக இவர் நீண்டகாலம் பணியாற்றியுள்ளார். அத்துடன்  இலங்கை அரசாங்கத்தின் வானொலித் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More