Home இலங்கை கிழக்கு மாகாண பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது

கிழக்கு மாகாண பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது

by admin

கிழக்கு மாகாணத்தின்  பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான  அனுமதியை தேசிய முகாமைத்துவ திணைக்களம்  இன்று வழங்கியுள்ளதென கிழக்குமாகாண முதலமைச்சரின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம்  கிழக்கு மாகாண முதலமைச்சரின் நீண்டகால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளதெனவும் இதனடிப்படையில் கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள 4784 வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளித்து   வெற்றிடங்களுக்குரிய அனைத்து ஆளணிகளையும் உள்வாங்குவதற்கான முழுமையான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார் எனவும் தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்களின் பிரகாரம் விரைவில் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட  வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் விரைவில் அவற்றை  நிரப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வேறு அரச தொழில்களில் ஈடுபடும் பட்டதாரிகள் விண்ணப்பங்கள் கோரப்படும் போது  அவற்றுக்கு விண்ணப்பிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் கிழக்கு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.  இதன் மூலம் வேலைவாய்யப்பின்றி தொழிலுக்காக போராடும் பட்டதாரிகளுக்கு அநீதிகள் ஏற்படாமல் தடுக்க முடியும் எனவும் அவர்  குறிப்பிட்டார்.

அத்துடன்  இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நிதியை விரைவில் பெற்றுக் கொள்வது தொடர்பான விடயங்களை எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள சந்திப்பின்  போது  கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More