முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு மீளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மஹிந்தவின் 42 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட்டு அதன் பின்னர் 50 உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பின்னர் மீளவும் 50 உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக இந்த தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Spread the love
Add Comment