மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் தப்புலா டி லிவேரா தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சாட்சியங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சட்ட மா அதிபருக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment