Home இலங்கை படைவீரர்களை இழிவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்படாது – ருவான் விஜேவர்தன

படைவீரர்களை இழிவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்படாது – ருவான் விஜேவர்தன

by admin


படைவீரர்களை இழிவுபடுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். சில தரப்பினர் படையினரின் நன்மதிப்பினை சிதைக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் படையினரின் உயிர்த்தியாகம் காரணமாக சுதந்திரம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எதிராக விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்த இடமளிக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் சில அரசியல்வாதிகள் படையினரை காலத்திற்கு காலம் இழிவுபடுத்தி வருகின்ற போதிலும், அனர்த்தங்களின் போது படையினரே உதவி செய்கின்றார்கள் என்பதனை அவர்கள் மறந்து விடுகின்றார்கள் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் படையினரை இழிவுபடுத்தியிருந்தார் எனவும் இது வருத்தமளிக்கும் வகையில் அமைந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படையினரின் நடவடிக்கைகளின் காரணமாகவே இன்று சிவாஜிலிங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வழியமைக்கப்பட்டது என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More