Home இலங்கை கடவுள் எப்பொழுது கருணைகாட்டுகின்றாரோ அப்போதுதான் தீர்வு – விஜயகலா மகேஸ்வரன்

கடவுள் எப்பொழுது கருணைகாட்டுகின்றாரோ அப்போதுதான் தீர்வு – விஜயகலா மகேஸ்வரன்

by admin

தமிழ் மக்கள் தீர்வுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் வெகு விரைவில் தீர்வு கிடைக்கும் என எண்ணியிருந்தோம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில்  நோக்கும் போது தீர்வு எப்போதோ ஒரு நாளைக்கு கிடைக்கும் என்ற நிலையே காணப்படுகிறது. அதை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்காது எப்பொழுது கடவுள் இந்த தீர்வை எங்களுக்கு வழங்கவேண்டும் என்று கருணை கூறுகின்றாரோ அன்றைக்குதான் தீர்வு.

எங்களுடைய தீர்வு என்றைக்கு ஒரு நாள் என  கடவுளால் எழுதியிருந்தால் அது அன்றைக்கு கிடைக்கும் இல்லையோ நாங்கள் இப்படியே வீதியில் நிற்க வேண்டிய ஒரு நிலை இருக்கிறது நாங்கள் தீர்வு தீர்வு என்று நினைத்துக்கொண்டிருக்காமல் யுத்தத்தின் வடுவில் இருந்து வெளி வரவேண்டும் ,  வெளி வந்திருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா தெரிவித்தார்.

இன்று 20-05-2017 கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் இடம்பெற்ற நிலமெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை  தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது

கடந்த கால நினைவுகளை நினைத்து பார்;த்தால் மீண்டும் அதிலிருந்து மீளவே முடியாது என்ற நிலைமையே இருந்தது. கடந்த கால முப்பது வருட யுத்தத்திற்கு முகம்கொடுத்து இன்று வெளியில் வந்திருக்கின்றோம் யுத்தத்திற்கு பிறகு அடிப்படை வசதிகளை நாங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் அபிவிருத்தியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில் எங்களுடைய வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தத்திற்கு முகம் கொடுத்திருக்கிறது. இந்த மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோவொரு வகையில் யுத்தத்தினால் பாதிப்புக்களுக்குள்ளாகியிருகிறார்கள். வடக்கு மாகாணத்தில் முப்பதாயிரம் பேர் அங்கவீனர்களாக உள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நல்லாட்சி அரசு அங்கவீனர்களுக்கு பல உதவிகளை வழங்கிவருகிறது.

அமைச்சர் வஜிர அபேயவர்த்தன எங்களுடைய விடுதலைப்புலிகளின் காலத்திலும் கூட  இங்கு வந்து சென்றிருக்கின்றார். அவர் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை எங்களைப் பார்க்கிலும் நன்கு தெரிந்தவர். ஒவ்வொரு நிமிடமும் கதைக்கும் போது எங்களுக்கே உதாரணம் சொல்லிக் கதைக்க கூடியவர் அப்படியான ஒரு அமைச்சர் எங்களுக்கு கிடைத்திருக்கின்றார் எனத் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் நாளைய அரசியல் தலைவர்களை தெரிவு செய்கின்ற போது மக்கள் நிதானமாக தெரிவு செய்ய வேண்டும் எனவும் இல்லை எனில் மீண்டும் வீதிக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும் எனத்தெரிவித்த அவர்  நல்லாட்சி அரசில் துரோகிகளுக்கும் இனவாதிகளுக்கும் இடம்கொடுக்க கூடாது என்றும் குறிப்பிட்டார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More