Home இலங்கை வடக்கிலிருந்து படையினர் வெளியேற்றப்பட வேண்டுமென விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கிலிருந்து படையினர் வெளியேற்றப்பட வேண்டுமென விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

by admin


வடக்கிலிருந்து முப்படையினரும் வெளியேற்றப்பட வேண்டுமென முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து வான், கடல் மற்றும் இராணுவப் படையினர் வெளியேற்றப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் வடக்கிலிருந்து படையினர் வெளியேறாவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டி ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம்  படையினர் நிலை கொண்டுள்ளதாகவும் வடக்கிற்கு அவ்வளவு தொகை இராணுவம் அவசியமற்றது என சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன் அண்மையில் வடக்கிற்கு வந்;திருந்த கனடாவின் ரொரன்டோ நகரபிதா ஜோன் டோரி இவ்வளவு முகாம்கள் எதற்கு என தம்மிடம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில்  1 லட்சத்து 50 ஆயிரம்    படையினர் நிலைநிறுத்தப்படவில்லை என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்  என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Eliathamby Logeswaran May 21, 2017 - 10:40 am

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் தேவையற்ற முப்படையினர் வெளியேற்றப்பட வேண்டுமென சம்பந்தன் ஒரு கோரிக்கையை விடுவாரா?

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More