Home இலங்கை குற்றம் இழைக்கும் அமைச்சர்கள் நீக்கப்பட வேண்டும் – மஹிந்த அமரவீர

குற்றம் இழைக்கும் அமைச்சர்கள் நீக்கப்பட வேண்டும் – மஹிந்த அமரவீர

by admin


குற்றம் இழைக்கும் அமைச்சர்கள் நீக்கப்பட வேண்டுமென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டின் மக்களுக்காக சேiயாற்ற முடியாத அமைச்சர்கள் அந்தப் பதவிகளை வகிப்பதில் எவ்வித பயனும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் நாட்டு மக்களின் சொத்துக்கள் களவாடப்படுமானால் அல்லது மோசடி செய்யப்படுமானால் அவ்வாறானவர்கள் பதவி வகிக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

நாம் பலவீனமாக செயற்பட்டால் நாம் உரிய முறையில் கடமையாற்றத் தவறினால் எம்மை பதவியிலிருந்து நீக்குவதில் பிரச்சினை கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் எந்தவொரு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொண்டு செயற்படத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More