Home இலங்கைஅமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன வெள்ளத்தில் சிக்கியுள்ளார்

அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன வெள்ளத்தில் சிக்கியுள்ளார்

by admin


அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் அமைச்சரின் வீடு பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் வீட்டுப் பகுதி 15 அடி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சரும், அவரது புதல்வரும் மாகாணசபை உறுப்பினருமான பசந்த யாபா  அபேவர்தனவும் வீட்டில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் மேல் பகுதிக்கு சென்று உதவி கோரியுள்ளதாகவும், ஹெலிகொப்டர் மூலம் அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சினால் ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2000மாம் ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை விடவும் இம்முறை அதிகளவு மோசமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More