மருத்துவ சிகிச்சைகளுக்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சைகளை கடந்த 18 மாதங்களாக ஒத்தி வைத்து ஒத்தி வைத்தே பிரதமர் இம்முறை அமெரிக்காவிற்கு பயணம் செய்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு தடவையும் அனர்த்த நிலைமைகள் குறித்து அறிக்கைகளை அவர் பெற்றுக் கொண்டு ஆலோசனை வழங்கி வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்
Spread the love
Add Comment