இலங்கை பிரதான செய்திகள்

அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு கிளிநொச்சியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பிரதேச செயலகங்களும் இணைந்து கிளிநொச்சி வாழ் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் வழங்கிய உணவுப்பொருட்களை நேற்றைய தினம் (1.6.2017)  அரச அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம்  தலைமையில் சென்ற உத்தியோகத்தர்கள் காலி மாவட்ட செயலகத்தில்   கையளித்தனர்

உலர் உணவு, மருத்துவ பொதிகள் மற்றும் ஆடைகள் உட்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதிக்கு மேற்பட்ட நிவாரணப்பொருட்கள் மூன்று பார ஊர்திகளில் எடுத்து செல்லப்பட்டன.

இப்பெருந்தொகையான நிவாரணப்பொருட்களை வழங்கிய மாவட்ட மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அரச அதிபர் தனது நன்றிகளை தெரிவித்ததோடு இது ஒரு நல்லெண்ண செயற்பாடாகவும் அமையும் எனவும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.