Home இலங்கைஅமைச்சு விடயங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுத்துள்ள ஜனாதிபதி

அமைச்சு விடயங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுத்துள்ள ஜனாதிபதி

by admin


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சு விடயங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளார். அமைச்சுக்களுக்கான துறைசார் நிறுவனங்கள் மற்றும் துறைகளை அறிவிப்பதில் இவ்வாறு கடுமையான தீர்மானம் எடுத்துள்ள ஜனாதிபதி துறைசார் அமைச்சிற்கு பொருந்தாத எந்தவொரு துறையையும் ஒதுக்கீட செய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

சில அமைச்சர்கள் தங்களது அமைச்சின் கீழ் சில துறைகள் மற்றும் நிறுவனங்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், நேரடித் தொடர்பு அல்லாத எந்தவொரு நிறுவனத்தினையும் அமைச்சர்கள் கோருவதனை போன்று வர்த்தமானியில் அறிவிக்கப்படாது என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More