Home இலங்கை வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை குழு அறிக்கை; சபையில் சமர்ப்பிப்பு

வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை குழு அறிக்கை; சபையில் சமர்ப்பிப்பு

by admin

வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை குழுவின் அறிக்கை முதலமைச்சரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 95ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே முதலமைச்சர் கையளித்தார்.

அறிக்கையை சமர்ப்பித்து சபையில் உரையாற்றுகையில்,

இந்த விசாரணை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்கிறேன். இது இன்றைய தினமே உறுப்பினர்களுக்கும் கையளிக்கப்படும். அதன் பின்னர் பிறிதொரு நாளில் அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் கொடுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அத்துடன் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் முகமாக ஒரு விசேட அமர்வினை நடத்தவேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More