Home உலகம் ஜெர்மனி – முனிச் நகர புகையிரதநிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம்

ஜெர்மனி – முனிச் நகர புகையிரதநிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம்

by admin

ஜெர்மனியின் முனிச் நகர் புகையிரதநிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுசம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென புகையிரதநிலையத்தினுள் சென்ற குறித்த நபர்   கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை  புகையிரத நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் பெண் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தாக்குதல் மேற்கொண்ட நபரும்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலீசார்  இது ஒரு  தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம்  எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More