Home இலங்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பங்களாதேஷின் நிவாரணநிதி ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பங்களாதேஷின் நிவாரணநிதி ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு

by admin

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனாவின் வாக்குறுதிக்கமைய வழங்கிய நிதியுதவியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம்  உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹம்துல்லாவினால்  உரிய காசோலை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமது நாட்டில் அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அயலிலுள்ள நட்பு நாடுகளுக்கு பங்களாதேஷ் வழங்கும் உதவிகளை பாராட்டிய ஜனாதிபதி அது இருதரப்பு உறவுகளின் சிறப்பான பண்பாகுமென தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More