Home இலங்கை வடமாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவில்லை – ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது சென்றதாக தெரிவிப்பு

வடமாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவில்லை – ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது சென்றதாக தெரிவிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண கல்வி அமைச்சர் தனது பதவியை செவ்வாய்க்கிழமை மதியம் வரை இராஜினாமா செய்வில்லை என தெரியவருகின்றது. அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை பதிலளிக்காது  சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கட்சி கலந்துரையாடலை முடித்துக்கொண்டு வெளியே வந்த கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து விட்டீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை அதற்கு பதிலளிக்காமல் வாகனத்தில் ஏறி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை விசாரணை செய்யவென முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகிய இருவரையும் பதவி விலக பரிந்துரை செய்திருந்தது.

கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் முதலமைச்சர் , இரு அமைச்சர்களையும் நாளைய தினம் (15ஆம் திகதி )  தமது பதவிகளை தியாகம் செய்யுமாறு கோரினார்.

அதன் பிரகாரம் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த 15ஆம் திகதி தனது இராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More