இலங்கை பிரதான செய்திகள்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால் நோயாளர்கள் அவதி


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

நாட்டில் முன்னெடுக்கப்படும் மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பு காரணமாக தீவிரமாக  டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு கோரி சுகாதார அமைச்சு அமைந்துள்ள வளாகத்திற்கு முன்பாக நேற்றையதினம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்களை  பொலிஸார் கலைக்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட குழப்பநிலையில் காயமடைந்த 30 பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்புத் தெரிவிக்கும் வகையில் இன்று நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில்வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.