Home இலங்கை சில தூதரங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்

சில தூதரங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சில தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பாவில் காணப்படும் சில தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் உள்ளிட்டன இவ்வாறு மூடப்பட உள்ளன.

இது குறித்து அறிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ராஜதந்திர பொறிமுறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எவ்வித பயனும் இல்லாது இயங்கி வரும் நிறுவனங்கள் இவ்வாறு மூடப்பட உள்ளதாகவும் ராஜதந்திர சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் வினைத்திறன் குறித்து ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களின் பதவிக் காலம் நிர்ணயம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More