Home இந்தியா ஆந்திர எல்லைக்கு மீன்பிடிக்கச் சென்ற 140 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்:-

ஆந்திர எல்லைக்கு மீன்பிடிக்கச் சென்ற 140 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்:-

by admin

ஆந்திர எல்லைக்கு மீன்பிடிக்கச் சென்ற 140 தமிழக மீனவர்களை அம்மாநில மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.சென்னை காசிமேடு பகுதிகளிலிருந்து ஆழ் கடலில் மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் ஆந்திர எல்லை வரை போய் வருவது வழக்கம். இந்தநிலையில் கடந்த செவ்வாய்கிழமை 200க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில் 13 விசை படகுகளில் சென்ற 140 மீனவர்களை அம்மாநில மீனவர்கள் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காசிமேடு விசைபடகு உரிமையாளர்கள் இன்று ஆந்திரா செல்ல உள்ளனர். அத்துடன் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் 140 பேர் மற்றும் அவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More