Home இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபயகோன் பதவிவிலகியுள்ளார்

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபயகோன் பதவிவிலகியுள்ளார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபயகோன் பதவிவிலகியுள்ளார் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவிவிலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1982ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட பீ.பி. அபயகோன்  கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல ஜனாதிபதியின் செயலாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி அரசாங்க அதிபராக அபயகோன் முதலாவதாக பதவி வகித்தார். ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் அதி உயர் பதவிகளை அபயகோன் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More