இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் மூக்கு கண்ணாடி, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் பேலியகொட லயன்ஸ் கழகத்தினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் மூக்கு கண்ணாடி என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று 02-07-2017 கிளிநொச்சி இரணைமடு தாமரை தடாக மண்டபத்தில் காலை பத்து மணிக்கு கிளிநொச்சி இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 150 மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்களும், 350 பொது மக்களுக்கு மூக்கு கண்ணாடியும், மூன்று பேருக்கு சக்கர நாற்காலியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பேலியகொட லயன்ஸ் கழக தலைவா் லயன்  திலக் பெர்ணாட்டோ, மற்றும்  லயன்ஸ் கழக உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.