Home இலங்கைகிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது

கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பசுமையான மற்றும் தூய்மையான  சுற்றுச் சூழலைக்கொண்ட பாடசாலையாக கடந்த 2015,2016 ஆண்டுகளில்  ஜனாதிபதி தேசிய விருதான சுக சர தக்சலாவ  விருதினை இரண்டு தடவை கிளிநொச்சி அம்பாள்குளம விவேகானந்த வித்தியாலயம் பெற்றுக்கொண்டது.
இரண்டு தடவைகள் இவ்விருதினை பெற்றுக்கொண்ட  அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் 2017 ஆம் ஆண்டுக்கான  சுற்றாடல் தகவல் நிலையம்  ஆரம்பிப்பதற்கான தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாகவும் காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய ரீதியில் ஐந்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக  சுற்றாடல் தகவல் நிலையம்  ஆரம்பிப்பது வழக்கமாகும். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் தகவல் நிலையம் அமைப்பதற்கான தேசியரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளில்  ஒரேயொரு தமிழ் பாடசாலையாக கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய நான்கு பாடசாலைகளும் சிங்கள மொழி பாடசாலைகளாகும்.
இதற்கான நிகழ்வு கடந்த முப்பதாம் திகதி பாடசாலையில் இடம்பெற்றது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளா் நாயகம் கலந்துகொண்டு சுற்றாடல் தகவல் நிலையத்தை தொடப்பி வைத்ததோடு மூன்று இலட்சம் ரூபா  பெறுமதியான நூலகளும் நூலக உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More