Home இலங்கை கிளிநொச்சியில் கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து -இருவர் வைத்தியசாலையில் -போக்குவரத்து தடை

கிளிநொச்சியில் கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து -இருவர் வைத்தியசாலையில் -போக்குவரத்து தடை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நேற்று செவ்வாய்  இரவு பதினொன்று முப்பது மணியளவில் கண்டாவளை  வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் இரண்டு கனரக வாகனங்கள்  நேருக்குநேர் மோதுண்டதில் காயமடைந்த இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பக்கமாக சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் முல்லைத்தீவிலிருந்து  பரந்தன்  நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த  லொறி இரக வாகனமும் வெளிக்கண்டல் பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டதனாலையே  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதி உதவியாளரும் லொறி இரக வாகனத்தின் சாரதியுமே காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அத்துடன் குறித்த வாகனங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்து உள்ளமையால் வீதியில் இருந்து  அகற்றப் படாமையால் இன்று அதிகாலை இரண்டு மணிவரை ஏ 32  முல்லை வீதியின் போக்குவரத்து தடைப்படுள்ளது  இவ்வாகனங்களை அகற்றுவதற்கு பாரம்தூக்கி  அல்லது யே .சி .பி இரக வாகனம் தேவைப்படுவதால் சில வேளைகளில் இன்று காலை வரை ஏ 32  முல்லை வீதியின் போக்குவரத்து தடைப்படலாம்  என சந்தேகிக்கப்படுகின்றது

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More