Home இலங்கை ஹரி போட்டார் புத்தகம் வெளியிட்டு தற்போது 20 வருடங்கள் நிறைவுற்றமையையொட்டி ஹரி போட்டார் விழா

ஹரி போட்டார் புத்தகம் வெளியிட்டு தற்போது 20 வருடங்கள் நிறைவுற்றமையையொட்டி ஹரி போட்டார் விழா

by admin
ஹரி போட்டார் (Harry Potter ) புத்தக வரிசையில் முதற்பதிப்பான  “Harry Potter and the Philosopher’s Stone” எனும் புத்தகம் வெளியிட்டு தற்போது 20 வருடங்கள் நிறைவுற்றமையையொட்டி British Council அதனை விழாவாக கொண்டாட தீர்மானித்து உள்ளது.
இந்த விழாவானது , யாழ்ப்பாணம் , கண்டி , கொழும்பு , Orion City , ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் சிறுவர்கள் , வயது வந்தவர்களுக்கான புதையல் தேடல்கள் , சிறுவர்களுக்கும் , வயது வந்தவர்களுக்கமான புத்தக வாசிப்பு , தொப்பிகளை வகைப்படுத்தும் நிகழ்வு , சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களுக்கான கைவினை பொருட்களை தயாரிக்கும் நிகழ்வு மற்றும் வினாவிடை போட்டி ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
யாழ்ப்பணத்தில் இல. 70, றக்கா வீதியில் அமைந்துள்ள British Council  நூலகத்தில் எதிர்வரும்  , 09ஆம் , 23ஆம் , 30ஆம் , ஆகிய தினங்களிலும் மற்றும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் மற்றும் 13ஆம் திகதிகளான வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிமுதல் 5 மணிவரை நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களை www.britishcouncil.lk/event எனும் இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More