Home இலங்கை பிரதமரின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்

பிரதமரின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகள் தொடர்பில் இந்த அலுவலகத்தில் செய்யப்படும் முறைப்பாடுகள் உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த முறைப்பாடுகள் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More