குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கின் சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தின் நல்லூரில், இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது.
வட மாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார், சாவகச்சேரி, நெடுந்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்க உள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளைத் தலைவி சாந்த அபிமானசிங்கம் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment