Home இலங்கை பாதுகாப்புச் செயலாளருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பாதுகாப்புச் செயலாளருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்னவிற்கும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் ( James Dauris )க்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பு உறவுகள், இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் என்பன குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் ரொம் பேர் ( Tom Burn) னும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கபில வைத்தியரட்ன, அண்மையில் பாதுகாப்புச் செயலாளராக பதவியை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More