Home இலங்கை தமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கைதான கடற்படையின் முன்னாள் பேச்சாளரது விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கைதான கடற்படையின் முன்னாள் பேச்சாளரது விளக்கமறியல் நீடிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.  2008 – 2009 காலப்பகுதியில் 5 தமிழ் இளைஞர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் குறித்த முன்னாள் கடற்படைப் பேச்சாளருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டி.கே.பி தசாநாயக்கவை எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவும் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More