Home இலங்கை ராஜபக்ஸவின் ஆட்சியில் 13 ஊடகவியலாளா்கள் கொலை -87 பேருக்கு அச்சுறுத்தல் – மங்கள சமரவீர

ராஜபக்ஸவின் ஆட்சியில் 13 ஊடகவியலாளா்கள் கொலை -87 பேருக்கு அச்சுறுத்தல் – மங்கள சமரவீர

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 13 ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டதோடு 87 போ் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டனா் என  நிதி மற்றும் ஊடக அமைச்சர்  மங்கள சமரவீர தெரிவித்துள்ளார் .

இலங்கை பத்திரிகை பேரவையின் மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழாவில்  விசேட விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் இதனை தெரிவித்துள்ளார் .

அங்கு அவா்  மேலும் தெரிவிக்கையில்

கடந்த மகிந்த ராஜபக்ஸ ஆட்சியின்  போது இலங்கையில் 13 ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டனா். மகிந்தவுக்கு ஆதரவாக செயற்படாத 87 ஊடகவியலாளா்கள் அச்சுறுத்தப்பட்டனா். மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

2006 ஆம் ஆண்டு தமிழ் ஊடகவியலாளரான திருகோணமலையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலையுடன் ஆரம்பமான ஊடகவியலாளர்கள்   கொலை 13போ் வரை சென்றது. எனத் தெரிவித்த அவா் தற்போது நாட்டில்  உண்மையான ஊடக சுதந்திரம் நிலவுகிறது என்றும் குறிப்பிட்டாh்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More