Home உலகம் பிரேசிலில் பிரித்தானிய பெண் மீது இனந்தெரியாத குழு துப்பாக்கிபிரயோகம்

பிரேசிலில் பிரித்தானிய பெண் மீது இனந்தெரியாத குழு துப்பாக்கிபிரயோகம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரேசிலில் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணியொருவர் இனந்தெரியாத குழுவொன்றின் துப்பாக்கிபிரயோகத்திற்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பிரேசிலின் அங்கிரா டொஸ் ரெயிஸ் பகுதியை நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருந்த குடும்பத்தினர் மீது இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பிரேசில் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் போது பெண்மணியொருவர் வயிற்றில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பிரேசில் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவைச் சேர்ந்த குறிப்பிட்ட குடும்பத்தினர் வழி தவறி பிரேசிலின் ஆபத்தான குடிசை பகுதிகளிற்குள் சென்றிருக்கலாம்  எனவும் சம்பவம் இடம்பெற்ற பகுதி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிறைந்த பகுதி எனவும் பிரேசில் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு துப்பாக்கி ஏந்திய நபர்கள் உத்தரவிட்டனர் எனினும்  பிரித்தானிய பிரஜைகளிற்கு அவர்கள் தெரிவித்தது விளங்காத நிலை காணப்பட்டது அதன் பின்னர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என பிரேசிலின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More