Home இலங்கை யாழ்.பல்கலைகழக மாணவர்கள் கொலைச் சந்தேகநபர்களின் பிணை மனு நிராகரிப்பு

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் கொலைச் சந்தேகநபர்களின் பிணை மனு நிராகரிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். பல்கலை கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் பிணை மனுவை, யாழ். மேல் நீதிமன்றம் இன்றையதினம்  நிராகரித்துள்ளது.

மாணவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர்கள் ஐந்து பேரின்  பிணை மனு இன்றையதினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில்   விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது விசாரணைகள்  நடைபெற்று வருவதால் பிணை வழங்க முடியாதென தெரிவித்த  நீதிபதி      சந்தேகநபர்களை   எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

யாழ். பல்கலை கழக மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்சன் ஆகிய இரு மாணவர்களும் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை யாழ். காவல் நிலையத்தை சேர்ந்த காசல்துறையினர்   அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.காவல் நிலையத்தை சேர்ந்த ஐந்து  காவல்துறையினர்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More