Home இலங்கை நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லூர் பகுதியில்  கடந்த யூலை மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ். நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் இடம்பெற்ற   அடையாள அணிவகுப்பில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்.மேல் நீதிமன்ற   நீதிபதி எம்.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்ததோடு, மற்றுமொரு உத்தியோகத்தர் காயமடைந்திருந்தார்.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சிவராசா ஜெயந்தன் என்பவர் கடந்த யூலை 25ஆம் திகதி யாழ்.காவல்  நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், நீதிபதி இளஞ்செழியனின் வாகன சாரதி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காவல்துறை  உத்தியோகத்தர் மற்றும் சம்பவத்தின் போது அங்கு   நின்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் ஆகியோர் சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More