Home இலங்கை 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – உதய கம்மன்பில

20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – உதய கம்மன்பில

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவது குறித்து 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அந்த நாளை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளர்h.

மாகாணசபைகளின் தவணைக் காலம் பூர்த்தியானதன் பின்னர் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் தேர்தல் நடத்துவது குறித்து திகதி நிர்ணயம் செய்யாவிட்டால் தேர்தலே நடத்த முடியாத நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More