Home இலங்கை அரசாங்கத்தின் பயணத்தை நிறுத்த முடியாது – ரிசாட் பதியூதீன்

அரசாங்கத்தின் பயணத்தை நிறுத்த முடியாது – ரிசாட் பதியூதீன்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கத்தின் பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

113 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த அரசாங்கம் நீண்ட தூரம் பயணிக்கும் என   தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனயில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்கவிற்கு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் இதுவரையில் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரவி கருணாநாயக்க, புதிய கலாச்சாரத்தை உருவாக்கி தாமாகவே கட்சியின் நலனைக் கருத்திற் கொண்டு பதவி விலகினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரே அவருக்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றனர் என  சுட்டிக்காட்டியுள்ள  ரிசாட் பதியூதீன் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவது தொடர்பில் பத்திரிகைகளின் வாயிலாகவே தெரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More