Home உலகம்சியரே லியோனில் இடம்பெற்ற மண்சரிவில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்

சியரே லியோனில் இடம்பெற்ற மண்சரிவில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சியரே லியோனில் இடம்பெற்ற மண்சரிவில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர் சியரே லியோனின் தலைநகர் ப்ரீடவுனுக்கு அருகாமையில் ஏற்பட்ட மண்சரிவிலேயே இவ்வாறு  சுமார் 300  பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

மண்சரிவு ஏற்பட்ட போது அனைவரும் உறக்கத்தில் இருந்த காரணத்தினால் பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ளம் மண்சரிவு காரணமாக பாரியளவில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More